நகரும் புடவி
நகரும் புடவி
இரவில் மலர்ந்திருந்த
கல்வாழையின் செம்மலர்களை
வருடிக் கொண்டிருந்தபோது
கூறினார்கள்
மூன்றாம் வீட்டு முதியவர்
காலமானதை ..
பூவன்வாழை
காய்த்திருந்த வீட்டின்
தம்பதியர் தற்பலியான அன்றுதான்
நான்கு ஈன்றது
எதிர்வீட்டு வெண்பூனை …
பறவைகளும் அணில்களும்
குதூகலித்தபடி பழங்கொறித்த
எங்கள் தெரு பெருவேம்பு
சாய்ந்த நாளில்தான்
பையன் பிறந்தான்
பக்கத்து வீட்டில் ..
படுகையின் பள்ளங்களை
நிரப்பியபடியே செல்லும்
நதியென
நகர்ந்துகொண்டிருக்கிறது
இப்புடவி …
(டிசம்பர் 29, 2019 சொல்வனம் இதழில் வெளிவந்தது)
கருத்துகள்
கருத்துரையிடுக