இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்

படம்
  'கொடை மடம்’ தமிழில் கவிதை, சிறுகதை எழுதுபவர்களில் ஒருவரான எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களின் முதல் நாவல். வித்தியாசமான வடிவம் கொண்ட நாவல் இது. அத்தியாயங்கள், உபகதைகள் என இரு சரடாக இந்நாவல் பகுக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்களாக உள்ளவை முகுந்தன் மற்றும் ஜென்னி இருவருக்குமான காதலைக் கூறுவதாகவும் உபகதைகள் பல்வேறு அமைப்புகளாகச் சிதறுண்ட மார்க்சிய லெனிய (மா.லெ) அமைப்புகளில் இயங்கிய, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் முகுந்தன்-ஜென்னி இடையிலான கதை எளிமையான காதல் கதை போல தோற்றம் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உபகதைகளில் கூறப்படும் வாழ்வின் தீவிரத் தன்மைதான். ஆனால், உண்மையில் எளிமையென எண்ணச் செய்யும் முகுந்தனின் வாழ்வும் அதேயளவு கடினமானதுதான். பெரு நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகளை அறிவதற்காக முகவர்களை அமர்த்துகிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் நாற்பது வினாக்கள் அடங்கிய தாளை (கொஸ்டினர்) தங்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்து மக்களிடம் அனுப்பி பதில் பெறுகிறார்கள். அவர்கள் அளிக்கும் பதில்களைக் கொண்டு மக்களின...

புதிய களங்களின் பரவசம்

படம்
  ( வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள  இளம் எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணாவின் சிறுகதை தொகுப்பான " முன்நகர்வு " நூலிற்கு எழுதிய முன்னுரை )            வாசிப்பின் இன்பம் என்பதே புதுப்புது நிலங்களையும் களங்களையும் அறிவதும் வாசிக்கும் வரையில் அங்கு மானசிகமாக வசிப்பதும்தான். இப்போது மொழிபெயர்ப்புகள் மிக அதிகளவில் வெளிவருவதற்கு வாசகனின் இந்த எதிர்பார்ப்பும் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.         நிறுவப்பட்ட   எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது அக்கதைகளின் வடிவமும் பேசு பொருளும் ஓரளவிற்கு யூகித்து விடக்கூடியதாகவே இருக்கிறது. எனவே அவர்கள் கதைகளின் நிகழ்விடத்தையும் காலத்தையும் வாசகன் கணிக்க முடியாதவாறு அடுத்தடுத்த புனைவை உருவாக்க முயல்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வாசிக்கும் வாசகன் அதன் தடத்தையும் உணரமுடியும். இந்த விளையாட்டில் மெல்லிய சலிப்பு வாசகனுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.         இந்த நிலையில் ஒரு புதிய எழுத்தாளரின் அதுவும் இளம் எழுத்தாளரின் கதைகளை வாசிக்க நேரும்போது ஒ...

மிதவை

படம்
         அழகம்மை  மஞ்சள் நிற வண்டுகளைப் போன்ற மலர்களை உதிர்த்துக் கொண்டிருந்த மரத்தின் கீழ் காத்திருந்தார். அது நவீன பள்ளி வளாகம்.  நகரத்தில் இந்த மரங்களைத்தான் அதிகமாக வைத்திருக்கிறார்கள். வேகமாக வளர்கிறது என்பதற்காகவே இவற்றை வைப்பதாக இவர் மருமகன் கணேசன் பேச்சினூடாக ஒருமுறை கூறினார். நகரத்தில் எல்லாமே விரைவாக நடக்கவேண்டும். பொதுவாக மலர்கள் உதிர்ந்து மேனியில் படும்போது இவருக்கு சிலிர்ப்பு ஏற்படும். ஆனால், இந்த மலர்கள் விழுந்தபோது ஒருவித அசூசை ஏற்பட்டது.      நீள்வாக்கான ப போன்ற வடிவமைப்பில் இரண்டடுக்கு கட்டடம். எட்டடி அகல நடைபாதை இருந்தது. வகுப்பறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வைத்த தீப்பெட்டிகளைப்போல அமைந்திருந்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் தெரிந்த பிள்ளைகளின் முகங்களில் ஏக்கம் இருந்தது. கோடை விடுமுறைக்குப்பின் இன்றுதான் பள்ளி திறப்பு. இவர் பேத்தி தட்சனா இன்று முதல்முறையாக பள்ளிக்கு வந்திருக்கிறாள். இந்த நாளை  இவர் பலநாட்களாக எதிர்பார்த்திருக்கிறார். இனி கிளம்ப வேண்டியதுதான் என்று எண்ணமெழுந்தபோதே மனதில் பெரும் வெறுமையை அடைந்தார்...