இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாயன் (சிறுகதை)

படம்
    காலையில் ஐந்தரை மணிக்கு வண்டியிலேறி அமரும்போது உள்ளே இருளாகவே இருக்கும். முதல் பலகையில் அமர்பவர்கள் தூங்கிக்கொண்டு வருவார்கள். அடுத்தடுத்த பலகைகளில் அமர்பவர்கள் தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடியபடியே வருவார்கள். திறந்திருந்தாலும் இருட்டையே நோக்க வேண்டுமென்பதால். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரமன் இங்கே வரும்வரைதான். பரமன் வந்த முதல்நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலையில் செல்லும்போது என்ன நடக்கிறதென்பதை கவனித்திருப்பான்போல. நாங்கள் பணிபுரிந்தது கப்பல் கட்டும் தளத்தில் சார் ஒப்பந்ததார நிறுவனத்தில். புதிதாகக் கட்டப்படும் கப்பல்களில் பைப்கள் பொருத்தும் பணி மட்டும் எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு. முதல் நாள் என்பதால் அன்று அவனுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. என்ன பணி நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனித்தான். மாலையில் வண்டி வந்தவுடன் முதலில் ஏறாமல் கடைசியாக ஏறிய பரமன், பலகையில் அமராமல் பின்னால் சாத்திய கதவில் முதுகைச் சாய்த்து கால் நீட்டியபடி தளத்தில் அமர்ந்தான். பின்கதவை கையால் தட்டினான். சத்தம் கேட்டவுடன் வண்டி கிளம்பியது. எல்லோரும் ஏறியவுடன் அப்படித் தட்டுவத...

விட்டு விலகுதல் (சிறுகதை)

படம்
நானும் அம்மாவும் மின்சார அலுவலகத்திற்குக் கிளம்பினோம். வீட்டில் யாரும் வெளியே கிளம்பும் சிறு அரவம் கேட்டவுடனேயே என் மகனின் உடல் விதிர்த்துவிடும். பிறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நடக்க ஆரம்பிக்காமல் தவழ்ந்தே முழு வீட்டையும் அளந்து திரிகிறான். ம்ம்..மா என்றும் னா..னும்.. என்றும் மட்டுமே உச்சரிக்கிறான். வெளியே எவர் கிளம்பினாலும் இரண்டு வார்த்தைகளையும் சேர்த்து உச்சரித்தபடி கைகளை உதற ஆரம்பிப்பான். அவன் நாங்கள் செல்வதை அறிந்து கை கால்களை உதற ஆரம்பிக்க என் மனைவி, சிறுவன் வழுக்கைத் தலையுடன் அமர்ந்த நிலையிலிருக்கும் ரப்பர் பொம்மையை அவன் கையில்கொடுத்து, அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று, நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் சென்றபின், நாங்கள் கிளம்புவதற்குப் பத்து நிமிடங்களாவது ஆகியிருக்கும். மின் கணக்கீடு செய்ய வந்தவர் மின் கட்டணத்துடன் இரண்டாயிரம் ரூபாய் முன்தொகையும் செலுத்த வேண்டுமெனக் குறித்துவிட்டு சென்றிருக்கிறார். அதை கட்டுவதற்காக அண்ணாநகர் பனிரெண்டாவது பிரதான சாலையிலுள்ள அலுவலகத்திற்குச் சென்றோம். கட்டுவதற்கான இடத்தில் வரிசையில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். இதுவே க...

கனக்கணம்

படம்
 கனக்கணம் பல நாட்கள் பல நூறு மணிகள் பல்லாயிரம் நிமிடங்கள் பல கோடி கணங்களை கடந்தாயிற்று... கடைசி ஒரு கணம் ஒரே ஒரு கணம் எஞ்சியுள்ளது கடக்கவே முடியாத எடையுடன் இதுவரை கடந்துவந்த அத்தனை கணங்களின் கனத்தையும்   தன்னுள் ஒருக்கிக்கொண்டு மாபெரும் பனிமலை போர்வையென உடலை இறுக்குகிறது எலும்புகள் கிட்டித்து நொறுங்க ஆயத்தமாகின்றன மனதிடம் மன்றாடுகிறேன்  ஒரு கணம்தான்... கனக்கனமானாலும் ஒரே ஒரு கணம் தாங்கிவிடு தாங்கிவிடென...   அந்த அந்தகக் கணம் முடியுமுன்னே பனிமலைப் போர்வை ஆவியாய் மறைந்தது அவள் விழிக் கூர்முனையின் துளியின் துளியில் கசிந்த விகசிப்பின் வெம்மையில்

நிறமாலை (கட்டுரை)

படம்
  திருமணத்திற்கு பின் பெண்களின் வாழ்க்கை முற்றிலும் அவள் கணவனைப் பொறுத்து வடிவம் கொள்கிறது என்பது ஒருவித மூடநம்பிக்கைதான். குடும்பத் தலைவன் ஆண் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டாலும் அந்த ஆணை இயக்குவது பெண்தான். தாயின் குணங்களை தனயன் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் வாழ்வை அது மாற்றுவதில்லை. ஆனால் திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை முறையை செயல்பாட்டை அவனின் மனையாளின் குணம்தான் தீர்மானிக்கிறது. பெருமளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. வெளியில் தெரியாமல் இருக்கக்கூடும், ஆனால் மாற்றம் நிச்சயமாக இருந்தே தீரும். “வாழ்க வளமுடன்”, “திருச்சிற்றம்பலம்”, “கடவுள் செய்த குற்றமடி” என்ற மூன்று பகுதிகளாக உள்ள எம். கோபாலகிருஷ்ணனின் “மனைமாட்சி” நாவல் வெவ்வேறு விதமான பெண்களின் குணங்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரிவான காட்சிகளுடன் விவரிக்கிறது. நீரின் குணமாக தண்மை, எங்கும் நிறையும் தன்மை, இலகுவானது என்று நம்பப்பட்டாலும் அதன் தன் வழி தானே தேறலின் உறுதியும், தன் குணத்திலிருந்து ஒருபோதும் வழுவாத திறனும் முதன்மையானது. பெண்கள் முழுக்கவே நீரை ஒத்தவர்கள். திருமணத்திற்கு முன் ...

ஆலமர்ந்தவர் (சிறுகதை)

படம்
  ஆலமர்ந்தவர்   புதுப்பட்டியில் ஆபரணப் பொருள்கள் விற்பனைக் கடைவைத்திருக்கும் கணேசன் தான் சின்ன வாத்தியாரை நினைவுபடுத்தினான். என்னுடையதிட்டம், என் திருமண அழைப்பிதழை கணேசனுக்கு கொடுத்தவுடன் 27 எண் பேருந்தில் ஏறி புதுக்கோட்டை செல்வதுதான். அவன் தான் "சின்ன வாத்தியாருக்கு கொடுத்தியா... இங்க பக்கத்துலதான் இருக்காரு" என்றான். நான் யோசிப்பதைப் பார்த்து "27 போயிடுச் சின்னா அரை மணி நேரத்துல 19 வரும்டா. அதுல போயிக்க. பெரிய வாத்தியாருதான் எங்க இருக்காருன்னு தெரியாது. கல்யாணம் பண்ணப்போற, ஒரு வாத்தியாரோட ஆசிர்வாதம் கெடைக்கிறது நல்லதுதானேடா. பக்கத்திலதானே இருக்காரு" என்றான். இந்த அளவிற்கு சொல்கிறானே, சிறிது தாமதமதமாவதால் ஒன்றும் குறையப்போவதில்லை. சரி செல்லலாம் என முடிவெடுத்தேன். அந்தத் தெருவிலேயே வடக்குப்பக்கம் நாலாவது தெருவுல கிழக்க பார்த்த கடைசிவீடு என்று அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். சின்ன வாத்தியாரின் நினைவை மெல்ல மீட்க ஆரம்பித்தேன்..... மனதினுள்ளே எத்தனை எத்தனை நினைவுகள் படிந்துள்ளன. அதைப்பற்றி நினைத்தவுடன்தான் இவ்வளவு விபரங்களும் உள்ளே இருத்தனவா, எ...