வரச்சாபம்

 வரச்சாபம்









காலடியோசை கேட்டவுடனேயே
பரவசத்தில் சிலிர்ப்படைந்த தோல்தான்

இப்போது சுருங்குகிறது
வெம்மையில்

மென்முகம் நோக்கியபோது
பல்லாயிர மலர்களாய் விரிந்த
அகம்தான் கூம்புகிறது
பாலைக் கள்ளியாய்

ஒவ்வோர் அணுவையும்
தீஞ்சுவையால்
நனைத்த குரல்தான்
எரியவைக்கிறது
கார்ப்பினால்

தாயின் இறகிற்குள் அணைந்த
புள்ளின் நிம்மதியைத் தந்த
அருகாமைதான் அளிக்கிறது …
எண்திசைக் காலும் சுழன்றடிக்கும் பாறைத்தூசியின்
நிலையின்மையை

வரம் ஈயும் தெய்வ மந்தகாசத்தின் பொருள்
பெறுவது வரம் மட்டுமல்ல என
உணரும்போதுதான் புரிகிறது



(டிசம்பர் 29, 2019 சொல்வனம் இதழில் வெளியான கவிதை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்